செய்திகள்
முகாமில் 61 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர்.
குடிமங்கலம்:
குடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், உடுமலை அரசு பொது மருத்துவமனை மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் குடிமங்கலம் வட்டார அரசு மருத்துவர் சுந்தரபாண்டியன் தலைமையில் உடுமலை அரசு பொது மருத்துவர் (ரத்த சேமிப்பு வங்கி) கலை முகில் முன்னிலையில் பெதப்பம்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
முகாமில் 61 பேர்கலந்து கொண்டுரத்ததானம் வழங்கினர்.
நடமாடும் மருத்துவமனை டாக்டர் கோகுல்ராஜ் கலந்து கொண்டார். முகாம் ஏற்பாடுகளை குடிமங்கலம் வட்டார சுகாதார ஆய்வாளர் யோகானந்தம், ஆய்வாளர்கள் செல்வம், பாண்டியராஜன், வியாபாரிகள் சங்க தலைவர் துரைசாமி, சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.