செய்திகள்

வேதாரண்யம் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 4 பேர் கைது

Published On 2019-05-11 10:55 GMT   |   Update On 2019-05-11 10:55 GMT
வேதாரண்யம் பகுதியில் பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பங்களில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் இன்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஓரடியங்குளம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் உண்டியலை கடந்த சில வாரங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடித்து சென்றனர். அதேபோல் தலைஞாயிறு, கரியாப்பட்டினம், வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் மர்ம நபர்கள் ஈடுபட்டுவந்தனர்.

இதுகுறித்து வேதாரண்யம், கரியாப்பட்டினம், தலைஞாயிறு போலீஸ் நிலையங்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தது. இதையடுத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த தொடர் விசாரணையில் குற்றவாளிகள் யார் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நீர்மூலை பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் (வயது 28), அமிர்தரூபன் (24), தலைஞாயிறு பகுதியை சேர்ந்த ரமேஷ் (26), பாலசிங்கம் (26) ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள், 5 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்கள் வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்துப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News