செய்திகள்
நீடாமங்கலம் பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம்
கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நீடாமங்கலம் பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
நீடாமங்கலம்:
கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நீடாமங்கலம் பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதில் பேரூராட்சி செயல்அலுவலர் சங்கர் மேற்பார்வையில் பேரூராட்சி பணியாளர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கினர். கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக பேரூராட்சி பகுதியில் சுகாதார நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என பேரூராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.