செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானக்கண்ரகுநாதன் மற்றும் போலீசார், கன்டகானப்பள்ளி ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த மாதேஷ் (வயது 46), மாரப்பா(38), கிருஷ்ணமூர்த்தி(46), சீனிவாசன்(48), மல்லேஷ்(28) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல், பர்கூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார், பூமாலை நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த சரவணகுமார்(42), பார்த்தீபன்(28) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.