உள்ளூர் செய்திகள்
.

சேலம் உடையாப்பட்டியில் லாரி டிரைவர் திடீர் சாவு

Published On 2022-04-16 06:12 GMT   |   Update On 2022-04-16 06:12 GMT
சேலம் அருகே லாரி டிரைவர் திடீரென வலிப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து இறந்தார்.
சேலம்:

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த தெற்கு காலிங்கராயன்பாளையம் பகுதியை  சேர்ந்தவர் கனகரெத்தினம் (வயது 55). டிரைவரான  இவர் சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு லாரி ஓட்டி வந்தார்.

இன்று அதிகாலை சேலம்   உடையாப்பட்டி   பகுதியில் வந்தபோது சோர்வாக இருப்பதாக கிளீனரிடம் கூறி விட்டு  லாரியை  சாலையோரம்  நிறுத்தி  ஓய்வெடுத்தார்.

பின்னர் சிறிது நேரத்தில் அவருக்கு   திடீரென வலிப்பு  ஏற்பட்டு சுருண்டு  விழுந்து   இறந்தார். இதனை பார்த்த கிளீனர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசில் புகார்    கொடுத்தார்.

அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற   போலீசார்  சம்பவம் குறித்து  விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது உடலை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு    ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது     உறவினர்களுக்கும்       தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சேலத்திற்கு விரைந்துள்ளனர்.
Tags:    

Similar News