உள்ளூர் செய்திகள்
மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை ரெயிலடி கிட்டப்பா பாலம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபஸ்ரீ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது கிட்டப்பா பாலம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அந்த வாலிபரை கைது செய்து, அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் அதே பகுதி வேதம்பிள்ளை தெருவை சேர்ந்த பாஸ்கரன் மகன் கார்த்திக் (வயது20) என்பது தெரியவந்தது. இதேபோல் அதே பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வேதம்பிள்ளை தெருவை சேர்ந்த அய்யப்பன் மகன் அரவிந்த் (22) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்தும் 50 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை ரெயிலடி கிட்டப்பா பாலம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபஸ்ரீ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது கிட்டப்பா பாலம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அந்த வாலிபரை கைது செய்து, அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் அதே பகுதி வேதம்பிள்ளை தெருவை சேர்ந்த பாஸ்கரன் மகன் கார்த்திக் (வயது20) என்பது தெரியவந்தது. இதேபோல் அதே பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வேதம்பிள்ளை தெருவை சேர்ந்த அய்யப்பன் மகன் அரவிந்த் (22) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்தும் 50 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.