செய்திகள்
விஜயலட்சுமி உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

ஓ.பி.எஸ் மனைவி மறைவுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் அஞ்சலி

Published On 2021-09-11 08:59 GMT   |   Update On 2021-09-11 08:59 GMT
மத்திய இணை அமைச்சரும், தமிழக முன்னாள் பா.ஜ.க மாநில தலைவருமான எல்.முருகன் இன்று பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு நேரில் வந்து சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
திண்டுக்கல்:

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக்குறைவால் கடந்த 1-ந்தேதி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். அவரது உடல் பெரியகுளத்தில் உள்ள பொது மயானத்தில் எரியூட்டப்பட்டது.

பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இன்று மத்திய இணை அமைச்சரும், தமிழக முன்னாள் பா.ஜ.க மாநில தலைவருமான எல்.முருகன் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு நேரில் வந்து சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் விஜயலட்சுமியின் உருவபடத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி., ஜெயபிரதீப் மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News