செய்திகள்
ராமநாதபுரம் அருகே தொழிலாளி தற்கொலை
ராமநாதபுரம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் தங்கப்பாநகரை சேர்ந்தவர்பாலுமகேந்திரன் (வயது 41). தொழிலாளி. திருமணமாகி 14 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் பரமக்குடிக்கு காதணி விழாவிற்கு மனைவியுடன் சென்ற பாலுமகேந்திரன், மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் வீட்டிற்கு வந்தவர் மன வேதனையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.