வழிபாடு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆத்யாயன உற்சவம் தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆத்யாயன உற்சவம் தொடக்கம்

Published On 2022-01-04 08:46 GMT   |   Update On 2022-01-04 08:46 GMT
திருப்பதி கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர் ஆகியோர் ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை பாராயணம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் ஆத்யாயன உற்சவம் தொடங்கியது. கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர் ஆகியோர் ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை பாராயணம் செய்தனர்.

முதல் 11 நாட்கள் ‘பகல் பத்து’ என்றும், மீதமுள்ள 10 நாட்கள் ‘இரவு பத்து’ என்றும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து 22-வது நாள் ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ பாசுரம் பாடப்படுகிறது. 23-வது நாள் ராமானுஜ நூற்றந்தாதி, 24-வது நாள் வராகசாமி சாத்து முறை, 25-வது நாள் ஆத்யாயன உற்சவம் நிறைவடைகிறது.

மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News