உள்ளூர் செய்திகள்
செம்பனார்கோவிலில் நெகிழி கழிவு மேலாண்மை
செம்பனார்கோவிலில் நெகிழி கழிவு மேலாண்மை திட்ட ஒப்படைப்பு விழா நடந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் தொகுதி, செம்பனார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட முடிகண்டநல்லூர் ஊராட்சியில் திடக்கழிவு கழிவு மேலாண்மை அலகு உள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி தூக்கி வீசப்படுவதை தடுக்கும் நடவடிக்கையாக செம்பனார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட முடிகண்டநல்லூர் ஊராட்சியில் மகளிர் சுய உதவி குழுக்களிடம் ஒப்படைக்கும் விழா நடைபெற்றது.
செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மகளிர் திட்ட இயக்குனர் கவிதாபிரியா, ஊரக வளர்ச்சி திட்ட உதவி இயக்குனர் முருகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ஸ்ரீதர் வவேற்றார்.
ஊரக வளர்ச்சித்துறை, தூய்மை பாரத இயக்கம் சார்பாக திடக்கழிவு கழிவு மேலாண்மை அலகு கடந்த 2020-ம்ஆண்டு துவங்கப்பட்டது.
இந்த நெகிழி கழிவு மேலாண்மை அலகில் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் உள்ள 57 ஊராட்சிகளில் இருந்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்கள் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கபட்டு பிளாஸ்டிக் கழிவுகள் பெறப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டு தார்சாலை அமைக்கும் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
1 மாதத்தில் 1 டன் பிளாஸ்டிக் குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுகிறது. இந்த நெகிழி கழிவு மேலாண்மை அலகு மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் நிவேதா முருகன் எம்.எல்.ஏ ஒப்படைத்தார்.
தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் முறையாக 1 கிலோ நெகிழியை தரம் பிரித்து கொடுப்பவர்களுக்கு 10 ருபாய் வழங்கும்
திட்டத்தை துவக்கி வைத்தார்.
நெகிழிப்பை, எண்ணெய் கவர், பால்கவர், பிஸ்கட்கவர் மசாலா கவர் ஆகிய
3 கிலோ நெகிழிகளை ஒப்படைத்த பெண்ணிற்கு ரூ.30 வழங்கப்படும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்தி
நெகிழி இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சிதுறை கண்காணிப்பாளர் தியாகராஜன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவாலர் விஜயலெட்சுமி, உதவி செயற்பொறியாளர் சோமசுந்தரம்.
தி.மு.க மாவட்ட தகவல் தொழிற்நுட்ப அணி அமைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், இளைஞர் அணி அமைப்பாளர் பாரதி, மற்றும் அரசு அதிகாரிகள், சுயஉதவிக் குழுவினர் என ஏராளமானவர்கள் கலந்து கொன்டனர். முடிவில் வட்டார இயக்க
மேலாளர் பரமேஸ்வரி நன்றி கூறினார்.