உள்ளூர் செய்திகள்
விபத்து நடந்த இடத்தில் மயிலாடுதுறை எஸ்.பி. நிஷா விசாரணை.

சாலையோரம் நின்ற கார் மீது லாரி மோதி 2 பேர் பலி

Published On 2022-04-16 09:51 GMT   |   Update On 2022-04-16 09:51 GMT
சீர்காழி அருகே சாலையோரம் நின்ற கார் மீது லாரி மோதியதில் பெண் உள்பட 2 பேர் பலியாகினர்.
சீர்காழி:

திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் பதர் நிஷா (72). இவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மலேசியா கோலாலம்பூர் செல்வதற்காக நேற்று வாடகை காரில் சென்றார்.
 
திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ண-சந்தர் (44) என்பவர் காரை ஓட்டிச் சென்றார்.சீர்காழி அருகே நடராஜ பிள்ளைச்சாவடி அடுத்த ஆலங்காடு பகுதியில் சாலையோரம்

கார் நின்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் சீர்காழி நோக்கி வந்த டாரஸ் லாரி கட்டுப்பாட்டை இழந்து நின்ற காரின் மீது மோதி சில அடி தூரம் இழுத்துச் சென்று, ஒரு வீட்டின் சுவற்றை

உடைத்து காரின் மீது லாரி ஏறி நின்றது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பதர்நிஷா, கிருஷ்ண-சந்தர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.காரின் மீது லாரி ஏறி

கார் உருக்குலைந்து நின்றதால் காரினை தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ஜெசிபி வாகனம் மற்றும் கடப்பாரையால் வெட்டி அகற்றி எடுத்தனர்.

காரில் இடி பாடுகளில் சிக்கியிருந்த உடல்களை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோத-னைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

திருவெண்காடு போலீசார் வழக்கு பதிந்து தப்பி-யோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி நிஷா விரைந்து சென்று விபத்து குறித்து

விசாரணை நடத்தினார். இந்த விபத்தினால் நாகை சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News