செய்திகள்
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் சமுதாயக் கூடத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
நொய்யல்:
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் சமுதாயக் கூடத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சுதமதி தலைமையில் செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 300 பேருக்கு முதல் மற்றும் இரண்டாம் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தினர். முகாமில் தவுட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.