செய்திகள்
திருபுவனை அருகே வீட்டில் இருந்த கல்லூரி மாணவி மாயம்
திருபுவனை அருகே வீட்டில் இருந்த கல்லூரி மாணவி திடீரென மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருபுவனை:
திருபுவனை அருகே மதகடிப்பட்டுபாளையம் நல்லூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் பழனிவேலு. விவசாயி. இவரது மகள் சுபலட்சுமி (வயது 18). இவர் விழுப்புரத்தில் உள்ள கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 10 நாட்களாக சுபலட்சுமி கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சுபலட்சுமியை திடீரென காணவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் சுபலட்சுமி இல்லை.
இதையடுத்து பழனிவேலு தனது மகள் மாயமானது குறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி சுபலட்சுமியை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருபுவனை அருகே மதகடிப்பட்டுபாளையம் நல்லூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் பழனிவேலு. விவசாயி. இவரது மகள் சுபலட்சுமி (வயது 18). இவர் விழுப்புரத்தில் உள்ள கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 10 நாட்களாக சுபலட்சுமி கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சுபலட்சுமியை திடீரென காணவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் சுபலட்சுமி இல்லை.
இதையடுத்து பழனிவேலு தனது மகள் மாயமானது குறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி சுபலட்சுமியை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.