ஆன்மிகம்
காரைக்கால் அம்மையார் குளக்கரையில் சிவலிங்க பூஜை

காரைக்கால் அம்மையார் குளக்கரையில் சிவலிங்க பூஜை

Published On 2021-03-13 08:01 GMT   |   Update On 2021-03-13 08:01 GMT
காரைக்கால் அம்மையார் குளக்கரையில் தயானந்த சரஸ்வதி சாமிகள் அமைப்பான தர்ம ரக்‌ஷணா சமிதி சார்பில் கூட்டு சிவலிங்க பூஜை நடைபெற்றது.
மகா சிவராத்திரி விழாவையொட்டி காரைக்கால் அம்மையார் குளக்கரையில் தயானந்த சரஸ்வதி சாமிகள் அமைப்பான தர்ம ரக்‌ஷணா சமிதி சார்பில் கூட்டு சிவலிங்க பூஜை நடைபெற்றது.

திருநள்ளாறு கோவில் சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் ஓதி பூஜை செய்தார். அவரை பின்தொடர்ந்து பக்தர்கள், தாங்களுக்கு வழங்கப்பட்ட சிறிய அளவிலான சிவலிங்கத்துக்கு பூஜை செய்து வழிபட்டனர்.இந்த கூட்டு பூஜையில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் நிரவி கார்க்கோடபுரீசுவரர் கோவில், காரைக்கால் ஒப்பிலார்மணியர் கோவில், தருமபுரம் யாழ்முறிநாதர் கோவில், நித்தீஸ்வரம் கோவில் மற்றும் பல்வேறு கோவில் வளாகத்திலும் கூட்டு சிவலிங்க பூஜை நடைபெற்றது.
Tags:    

Similar News