செய்திகள்
கோப்புப்படம்

நெல்லை அரசு மருத்துவமனையில் 47 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை

Published On 2021-03-05 09:30 GMT   |   Update On 2021-03-05 09:30 GMT
நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 759-ஆக உயர்ந்து உள்ளது.
நெல்லை:

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று 481 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மாநகர பகுதியை சேர்ந்த 3 பேருக்கும், பாளையில் 2 பேருக்கும், அம்பையில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 19 வயதுடைய வாலிபரும் ஒருவர். பாதிக்கப்பட்டவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 759 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 7 பேர் குணமடைந்தனர். இதுவரை 15 ஆயிரத்து 498 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். தற்போது 47 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவுக்கு 214 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Tags:    

Similar News