செய்திகள்
மீஞ்சூர் அருகே இறால் பண்ணையில் வாலிபர் மர்ம மரணம்
மீஞ்சூர் அருகே இறால் பண்ணையில் வாலிபர் மர்ம மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த தாங்கல், பெரும்புலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணை உள்ளது. இங்கு மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த போராஸ் தாரா (வயது 26) என்பவர் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் இரவு இறால் பண்ணையில் போரஸ் தாரா தூங்கினார். காலையில் மற்ற தொழிலாளர்கள் வந்து பார்த்த போது அவர் படுக்கையிலேயே இறந்து கிடந்தார். இதுபற்றி காட்டூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
போரஸ்தாரா எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. அவரை யாரேனும் கொலை செய்தனரா?அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.