செய்திகள்
கோப்பு படம்

மட்டன் குழம்பு வைத்து தராததால் கூலி தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2019-11-06 11:02 GMT   |   Update On 2019-11-06 11:02 GMT
கவுண்டம்பாளையம் அருகே மனைவி மட்டன் குழம்பு வைத்து தராததால் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கவுண்டம்பாளையம்:

கோவை பெரியநாயக்கன்பாளையம் வெள்ள மடை அருகே தொட்டி பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 47). கூலி தொழிலாளி.

இவர் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்றும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் மனைவியிடம் மட்டன் குழம்பு வைத்து தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு அவரது மனைவி பணம் இல்லை என்று சொல்லி மறுத்துள்ளார்.இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் வீட்டிற்கு வெளியில் திண்ணையில் படுத்திருந்த நாகராஜ் மனவேதனை அடைந்து வீட்டில் வைத்திருந்த பூச்சிகொல்லி மருந்தை குடித்தார். சிறிது வாந்தி எடுத்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு கோவில்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News