செய்திகள்
விஷம்

பெற்றோர் திருமணம் செய்து வைக்காததால் தொழிலாளி தற்கொலை

Published On 2021-09-11 10:39 GMT   |   Update On 2021-09-11 10:39 GMT
கோவையில் பெற்றோர் திருமணம் செய்து வைக்காததால் மனமுடைந்த தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
கோவை:

கோவை தொண்டாமுத்தூர் கலிக்கநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் கார்த்தி (34). கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது.

இந்த நிலையில் கார்த்தி தனக்கு திருணம் செய்து வைக்க பெற்றோரிடம் கேட்டு வந்தார். ஆனால் அவர்கள் பெண் பார்க்காமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் விரக்தி அடைந்து வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத் திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி சூளேஸ்வரன பட்டி பகுதியை சேர்ந்தவர் சங்கர ராமேஷ்வரன் (வயது 24). இவர் பி.டேக் படித்து விட்டு கடந்த 2 வருடங்களாக வேலை தேடி வந்தார்.

ஆனால் அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரமடையை சேர்ந்த 51 வயது பெண் கடந்த 8 வருடங்களாக பாலின நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தி அடைந்த அவர் வி‌ஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News