செய்திகள்
கோப்புபடம்

சாத்தூரில் கொரோனாவுக்கு அரசு வக்கீல் பலி

Published On 2021-06-07 09:43 GMT   |   Update On 2021-06-07 09:43 GMT
சாத்தூரில் கொரோனாவுக்கு 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் வக்கீல் வினோபா செல்வன்துரை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சாத்தூர்:

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நீதிமன்றத்தில் குற்றத்துறை அரசு உதவி வழக்கறிஞராக பணிபுரிந்தவர் வினோபா செல்வன் துரை.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் உள்ள மடத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த இவர், சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரி இல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் வக்கீல் வினோபா செல்வன்துரை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags:    

Similar News