செய்திகள்
கோட்டப்பட்டி அருகே வீட்டில் நாட்டுத்துப்பாக்கியை பதுக்கியவர் கைது
கோட்டப்பட்டி அருகே வீட்டில் நாட்டுத்துப்பாக்கியை பதுக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரூர்:
கோட்டப்பட்டி அருகே உள்ள முள்ளிகாடு பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 50). இவர் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கியை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக கோட்டப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவருடைய வீட்டில் சோதனை நடத்தினார்கள். அப்போது மாட்டுக் கொட்டகையில் பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார், பழனியை கைது செய்தனர்.