ஆன்மிகம்
ஏரிக்குப்பம் யந்திர சனீஸ்வரர் கோவில்

ஏரிக்குப்பம் யந்திர சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா ரத்து

Published On 2020-12-18 06:00 GMT   |   Update On 2020-12-18 06:00 GMT
கொரோனா கட்டுப்பாடு காரணமாக யந்திர சனீஸ்வர பகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா ரத்து செய்யப்பட்டதாக கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
சந்தவாசலை அடுத்த ஏரிக்குப்பம் கிராமத்தில் யந்திர சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. படவேடு ரேணுகாம்பாள் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் வருகிற 27-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என்று பக்தர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி சனிப்பெயர்ச்சி விழா நடத்த அனுமதி வழங்காததால், சனிப்பெயர்ச்சி விழா ரத்து செய்யப்பட்டதாக கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்தார். விழா ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News