செய்திகள்
ஆற்காடு அருகே மாற்றுத்திறனாளி வாலிபர் குளத்தில் மூழ்கி பலி
ஆற்காடு அருகே மாற்றுத்திறனாளி வாலிபர் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த கணியனூர் முப்பதுவெட்டி ரோட்டை சேர்ந்தவர் சேகர் இவரது மகன் பெருமாள் (வயது 18). மாற்றுத்திறனாளி நேற்று பெருமாளின் பெற்றோர் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர். இதனால் பெருமாள் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது அங்குள்ள குளத்தில் பெருமாள் கால் கழுவ சென்றார். அங்கு அவர் திடீரென தவறி கீழே விழுந்தார் அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால் அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். வெளியூர் சென்று இருந்த பெருமாளின் பெற்றோர் மாலை வீட்டிற்கு வந்து பெருமாளை தேடி பார்த்தனர். அவர் எங்கும் இல்லை. பெருமாளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
அப்போது குளத்தின் கரையில் பெருமாளின் கால்தடம் இருந்ததால் பெருமாள் குளத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என சந்தேகித்து திமிரி போலீஸ் மற்றும் ஆற்காடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 2 மணி நேரம் போராடி பெருமாளின் பிணத்தை மீட்டனர்.
இதுகுறித்து திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாள் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த கணியனூர் முப்பதுவெட்டி ரோட்டை சேர்ந்தவர் சேகர் இவரது மகன் பெருமாள் (வயது 18). மாற்றுத்திறனாளி நேற்று பெருமாளின் பெற்றோர் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர். இதனால் பெருமாள் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது அங்குள்ள குளத்தில் பெருமாள் கால் கழுவ சென்றார். அங்கு அவர் திடீரென தவறி கீழே விழுந்தார் அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால் அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். வெளியூர் சென்று இருந்த பெருமாளின் பெற்றோர் மாலை வீட்டிற்கு வந்து பெருமாளை தேடி பார்த்தனர். அவர் எங்கும் இல்லை. பெருமாளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
அப்போது குளத்தின் கரையில் பெருமாளின் கால்தடம் இருந்ததால் பெருமாள் குளத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என சந்தேகித்து திமிரி போலீஸ் மற்றும் ஆற்காடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 2 மணி நேரம் போராடி பெருமாளின் பிணத்தை மீட்டனர்.
இதுகுறித்து திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாள் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.