ஆன்மிகம்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

Published On 2021-04-21 05:46 GMT   |   Update On 2021-04-21 05:46 GMT
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவத்தையொட்டி அமிர்தகடேஸ்வரர்-அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.

இங்கு திருக்கல்யாண உற்சவத்தையொட்டி அமிர்தகடேஸ்வரர்-அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சீர்வரிசை எடுத்து கோவிலுக்கு வந்ததும் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்கிட மங்கல நாணை அணிவித்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News