கோபி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கோபி:
கோபி அருகே உள்ள சிங்கிரிபாளையம் தடப்பள்ளி வாய்க்கால் அருகே கரிய காளியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் வளாகம் உள்ளே மாரியம்மன் கோவிலும் உள்ளது. இரவு வழக்கம் போல் கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார்கள்.
மீண்டும் காலை கோவிலை திறக்க வந்தபோது கோவில் ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. கரிய காளியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள மாரியம்மன் கோவில் உண்டியலை மர்ம ஆசாமிகள் உடைத்து உண்டியலில் இருந்த ஆயிரக்கணக்கான பணத்தை திருடி சென்று விட்டனர்.
அதன் பிறகு கரிய காளியம்மன் கோவில் உண்டியலை மர்ம ஆசாமிகள் உடைக்க முயன்றபோது அந்த உண்டியலை அவர்களால் உடைக்க முடியவில்லை. இதனால் மர்ம ஆசாமிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று விட்டனர். இதனால் அந்த உண்டியலில் உள்ள ஆயிரக்கணக்காண பணம் தப்பியது.
இந்த சம்பவம் குறித்து கடத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து உண்டியல் திருடர்களை தேடி வருகிறார்கள்.