செய்திகள்
கோவை அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
கோவை அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை அருகே இடையர்பாளையம் செங்காடு தோட்டம் முதல் வீதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 43). இவர் தனியார் நிறுவனத்தில் டர்னராக வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் திருமணம் ஆகவில்லை. இந்த விரக்தியில் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.