உள்ளூர் செய்திகள்
பேராவூரணி அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு.

அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

Published On 2022-01-08 09:54 GMT   |   Update On 2022-01-08 09:54 GMT
பேராவூரணி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பேராவூரணி காமராஜர் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், படுக்கைகள் உள்ளனவா, ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளனவா, மூன்றாவது அலை கொரோனாத் தொற்று ஏற்பட்டால் அதனை சமாளிக்க கூடிய கட்டமைப்புகள் உள்ளனவா என ஆய்வு செய்தார். 

மேலும், எதையும் எதிர்கொள்ளும் வகையில், மருத்துவர்கள் 
தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், வட்டாட்சியர் சுகுமார், சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் திலகம், பேராவூரணி அரசு மருத்துவமனை டாக்டர் பாஸ்கர், வட்டார மருத்துவ அலுவலர்கள் சௌந்தர்ராஜன் (பேராவூரணி), ராமலிங்கம் (சேதுபாவாசத்திரம்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேராவூரணி 
தவமணி, குமாரவடிவேல், சேதுபாவாசத்திரம் கோபாலகிருஷ்ணன் 
மற்றும் பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News