செய்திகள்
பூண்டி ஏரி

பூண்டி ஏரியில் இருந்து இன்று மாலை நீர் திறப்பு

Published On 2020-11-27 09:15 GMT   |   Update On 2020-11-27 09:15 GMT
பூண்டி ஏரியில் இருந்து இன்று மாலை உபரி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:

சென்னையை அடுத்த பூண்டி நீர்தேக்கத்திலிருந்து இன்று மாலை நீர் திறக்கப்படுகிறது. நீர்வரத்து விநாடிக்கு 15,000 கனஅடியாக உள்ள நிலையில் 10,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட உள்ளது.

உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதால் கொசஸ்தலையாறு கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பூண்டி ஏரியில் இருந்து இன்று மாலை 5 மணி முதல் உபரி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News