உள்ளூர் செய்திகள்
பெட்ரோல் டீசல் கியாஸ் சிக்கனத்தை வலியுறுத்தி சைக்கிள் பேரணி நடந்தது.

காட்பாடியில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிக்கனத்தை வலியுறுத்தி சைக்கிள் பேரணி

Published On 2022-04-17 09:36 GMT   |   Update On 2022-04-17 09:36 GMT
காட்பாடியில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிக்கனத்தை வலியுறுத்தி சைக்கிள் பேரணி நடைபெற்றது.
வேலூர்:

காட்பாடி அரசு சட்டக் கல்லூரி அருகில் இருந்து பெட்ரோல் டீசல் சிக்கனத்தை வலியுறுத்தி இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் சார்பில் சைக்கிள் பேரணி இன்று நடந்தது. 

நிகழ்ச்சிக்கு காட்பாடி டி.எஸ்.பி பழனி தலைமை தாங்கி சைக்கிள் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் சென்னை பகுதி அதிகாரி திலகவதி, வேலூர் மாவட்ட விற்பனை அதிகாரி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பெட்ரோல் டீசல் கேஸ் சிக்கனத்தை வலியுறுத்தி சில்க் மில், ஓடை பிள்ளையார் கோவில், ஆக்சிலியம் கல்லூரி ரவுண்டானா, காங்கேய நல்லூர் ரோடு வழியாக வந்து மீண்டும் அரசு சட்டக்கல்லூரி முன்பாக சைக்கிள் பேரணி முடிவடைந்தது. பேரணியில் வேலூர் மாவட்ட விநியோ-கஸ்தர்கள் 150&க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News