செய்திகள்
கைது

பொதுக்கழிப்பிடம் அருகே கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது

Published On 2021-04-30 09:56 GMT   |   Update On 2021-04-30 09:56 GMT
கோவை சுங்கத்தில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே கஞ்சாவை பதுக்கி விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை:

கோவை சுங்கத்தில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ராமநாதபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். 

அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த அர்சத் (வயது 19) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News