செய்திகள்
மரணம்

விராலிமலை அருகே மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

Published On 2021-09-18 09:23 GMT   |   Update On 2021-09-18 09:23 GMT
விராலிமலை அருகே மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை:

விராலிமலை அருகே உள்ள செவனம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 32). இவரது மனைவி கனகவள்ளி. இவர்கள் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டிற்கு முன்பு உள்ள இரும்பு கதவை திறந்தபோது திடீரென மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த சரவணனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மின்கசிவு காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News