ஆட்டோமொபைல்
டாடா அல்ட்ரோஸ்

உற்பத்தியில் புது மைல்கல் எட்டிய டாடா அல்ட்ரோஸ்

Published On 2021-09-28 09:10 GMT   |   Update On 2021-09-28 09:10 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் ஆறு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.


டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் உற்பத்தியில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் அல்ட்ரோஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட 20 மாதங்களில் இந்த மைல்கல் எட்டப்பட்டு உள்ளது.

அல்ட்ரோஸ் மாடலின் ஒரு லட்சமாவது யூனிட் சிவப்பு நிறம் கொண்டிருக்கிறது. இது பூனே உற்பத்தி ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது. டாடா அல்ட்ரோஸ் மாடல் குளோபல் என்கேப் பாதுகாப்பு சோதனையில் ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெற்று அசத்தி இருக்கிறது. 



இந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் மாடல் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின், 1.2 லிட்டர் ஐ டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

Tags:    

Similar News