செய்திகள்
முக ஸ்டாலினுடன் இடதுசாரி கட்சி தலைவர்கள் சந்திப்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் உடன் இடதுசாரி கட்சி தலைவர்கள் சந்தித்தனர்.
சென்னை:
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கடந்த 27,30-ந்தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. சுமார் 77 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை இரண்டாவது நாளாக இன்றும் நீடிக்கிறது. இதில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை இடதுசாரி கட்சி தலைவர்கள் சந்தித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ. கட்சியின் முத்தரசன் ஆகியோர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.