செய்திகள்
காதலி இறந்ததால் விரக்தி- பிறந்த நாளில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
மேட்டுப்பாளையத்தில் காதலி இறந்ததால் விரக்தியில் இருந்த வாலிபர் தனது பிறந்த நாளில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் எல்.எஸ்.புரம் 4 வது வீதியை சேர்ந்தவர் பூபேஸ் (வயது 23).
லாரிகளில் ஸ்டிக்கர் ஓட்டும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 8 வருடங்களாக தன்னோடு படித்த மாணவி ஒருவரை காதலித்து வந்தார்.
இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்ததும் அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்.
இதனால் அந்தப்பெண் கடந்த மாதம் 16-ந்தேதி சாணி பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பூபேசும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.
வீடு வந்த அவர் தனது காதலியை நினைத்து மனவேதனையுடன் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு நேற்று பிறந்த நாள் வந்தது. பிறந்த நாள் கொண்டாட தனது காதலி உடன் இல்லை என விரக்தி அடைந்தார். அப்போது வீட்டில் இருந்த அவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தாமோதரன் மற்றும் போலீஸ்காரர் யுவராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் எல்.எஸ்.புரம் 4 வது வீதியை சேர்ந்தவர் பூபேஸ் (வயது 23).
லாரிகளில் ஸ்டிக்கர் ஓட்டும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 8 வருடங்களாக தன்னோடு படித்த மாணவி ஒருவரை காதலித்து வந்தார்.
இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்ததும் அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்.
இதனால் அந்தப்பெண் கடந்த மாதம் 16-ந்தேதி சாணி பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பூபேசும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.
வீடு வந்த அவர் தனது காதலியை நினைத்து மனவேதனையுடன் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு நேற்று பிறந்த நாள் வந்தது. பிறந்த நாள் கொண்டாட தனது காதலி உடன் இல்லை என விரக்தி அடைந்தார். அப்போது வீட்டில் இருந்த அவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தாமோதரன் மற்றும் போலீஸ்காரர் யுவராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.