செய்திகள்
கைது

வல்லம் அருகே அரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டியவர் கைது

Published On 2021-04-04 09:59 GMT   |   Update On 2021-04-04 09:59 GMT
வல்லம் அருகே அரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
வல்லம்:

தஞ்சை-திருச்சி சாலையில் உள்ள முனையம்பட்டி பிரிவு சாலை அருகே அரிவாளுடன் நின்று கொண்டிருந்த நபர் அந்த பகுதியாக வந்த ஒருவரை வழிமறித்து மிரட்டி பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த வல்லம் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சென்று அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் சென்னம்பட்டியை சேர்ந்த அமுதன்(வயது39) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து அமுதனை கைது செய்தனர்.
Tags:    

Similar News