செய்திகள்
கோப்புபடம்

மின் இணைப்புகள் வழங்க உடுமலைக்கு உபகரணங்கள் வருகை

Published On 2021-07-30 10:14 GMT   |   Update On 2021-07-30 10:14 GMT
டிரான்ஸ்பார்மர், மின் கம்பங்கள், கம்பிகள் தேவைக்கு ஏற்ப தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது.
உடுமலை:

உடுமலை மின் பகிர்மான வட்டத்தில் உள்ள உடுமலை, பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சி ஆகிய மின் பகிர்மான வட்டங்களில் மின் இணைப்பு வழங்கப்படவுள்ளது. இதற்கு தேவையான மின் கம்பங்கள், கம்பிகள், டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்ட மின் வாரியத்திற்கு தேவையான அனைத்துப்பொருட்களும் துணை மின் நிலைய பராமரிப்பிற்கான பொருட்களும் உடுமலையிலுள்ள மின் வாரிய தலைமை பண்டக இருப்பு மையத்திலிருந்து தேவையான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு தட்கல் மின் இணைப்பு வழங்குதல், தொழிற்சாலை மின் இணைப்புகளுக்கு டிரான்ஸ்பார்மர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களினால் மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட அனைத்துப்பொருட்களும், தலைமை அலுவலகத்திற்கு வந்து கொண்டுள்ளது.
 
இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில:

உடுமலை மின் பகிர்மான வட்டத்திலுள்ள பிரிவு அலுவலகங்களுக்கு தலைமை பண்டக மையத்திலிருந்து அனைத்துப்பொருட்களும் அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்பார்மர், மின் கம்பங்கள், கம்பிகள் தேவைக்கு ஏற்ப தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது என்றனர்.
Tags:    

Similar News