செய்திகள்
ஆரணியில் பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை
ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் 101 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆரணி:
தமிழ்நாட்டில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆரணி மாவட்ட கல்வி அலுவலர் த.சம்பத் மேற்பார்வையில், ஆரணி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) டி.ராஜவிஜயகாமராஜ், நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் செந்தில்குமார், நகராட்சி சித்த மருத்துவர் சங்கரீஸ்வரி ஆகியோர் மேற்பார்வையில் ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் 101 நபர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.