செய்திகள்
கோப்புபடம்

காதலிக்கு வீடியோ கால் செய்து தூக்குமாட்டிய வாலிபர் - கயிறு இறுக்கியதில் பலி

Published On 2021-09-18 09:22 GMT   |   Update On 2021-09-18 09:22 GMT
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜாகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூர்:

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜாகுமார், (வயது 18). இவர் திருப்பூர் ஈட்டிவீரம்பாளையம் முட்டியங்கிணறு பகுதியில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்தார். 

இந்தநிலையில் அவர் சொந்த ஊரை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். சம்பவத்தன்று பீகாரில் உள்ள காதலிக்கு ‘வாட்ஸ் அப்’ வீடியோவில் பேசி உள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து ராஜாகுமார், காதலியை பயமுறுத்தும் வகையில் விளையாட்டாக ‘நான் தற்கொலை செய்ய போகிறேன்’ என கூறி கயிற்றால் கழுத்தில் சுற்றி மரத்தை பிடித்து தொங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கயிறு கழுத்தை இறுக்கியதில் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி பலியானார். 

இதை வீடியோவில் பார்த்த காதலி அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜாகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  
Tags:    

Similar News