செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2020-11-09 14:36 GMT   |   Update On 2020-11-09 14:36 GMT
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேட்டூர்:

கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் தாக்கம் குறைய தொடங்கியது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்துகொண்டே வந்தது. குறிப்பாக நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 924 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரத்து 670 கன அடி வீதம் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்தேவைக்காக வினாடிக்கு 12 ஆயிரத்து 800 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. 

தண்ணீர் திறப்பை விட அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர வாய்ப்பு உள்ளது. நேற்று அணை நீர்மட்டம் 95.44 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News