இஸ்லாம்
தர்கா

மேலப்பாளையம் செய்யது அப்துர் ரஹ்மான் ஐதரூஸ் பூக்கோயா தங்கள் கந்தூரி விழா

Published On 2022-02-10 04:39 GMT   |   Update On 2022-02-10 04:39 GMT
நெல்லை மேலப்பாளையம் செய்யது அப்துர் ரஹ்மான் ஐதரூஸ் பூக்கோயா தங்கள் 160-வது வருட கந்தூரி விழா வருகிற 15, 16-ந் தேதிகளில் நடக்கிறது.
நெல்லை மேலப்பாளையம் செய்யது அப்துர் ரஹ்மான் ஐதரூஸ் பூக்கோயா தங்கள் 160-வது வருட கந்தூரி விழா வருகிற 15, 16-ந் தேதிகளில் நடக்கிறது. 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை யானையின் மீது வைத்து கொடி ஊர்வலம் நடக்கிறது.

இந்த ஊர்வலம் ஞானியாரப்பா பெரிய தெரு, ஞானியாரப்பா சின்னத்தெரு, அக்பர் தெரு, தெற்கு ரகுமானியபுரம், வடக்கு ரகுமானியபுரம், சாயன் தரகன் தெரு, ஆசூரா மேலத்தெரு, கீழத்தெரு, தெற்கு தைக்கா தெரு வழியாக வந்து தர்காவில் கொடி ஏற்றப்படும். பின்னர் இரவு 9 மணியில் இருந்து 11 மணி வரை திக்ரு மஜ்லீஸ் மற்றும் ராத்தீபு சரீபு ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தர்கா அக்தார் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News