உள்ளூர் செய்திகள்
மழை

தமிழகம்-புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை நாளையுடன் முடிகிறது

Published On 2022-01-21 08:01 GMT   |   Update On 2022-01-21 08:01 GMT
தமிழகம்-புதுச்சேரி பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 26-ந் தேதி தொடங்கியது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை நாளை (22-ந்தேதி) தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரள பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News