செய்திகள்
கோப்புபடம்

திருவண்ணாமலை ஆரணி வந்தவாசியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் - டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு

Published On 2021-06-14 17:29 GMT   |   Update On 2021-06-14 17:29 GMT
திருவண்ணாமலை, ஆரணி மற்றும் வந்தவாசியில் டாஸ்மாக் மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் உள்ள பா.ஜ.க. மாவட்ட அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். இதில் டாஸ்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நிரந்தரமாக கடைகளை மூட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். அதேபோல் இந்த கோரிக்கையை வலியுறுத்தி திருவண்ணாமலையில் பா.ஜ.க.வினர் தங்கள் வீடுகள் முன்பு கருப்பு கொடி ஏந்தியும், பதாகைகள் ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரணியை அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் பா.ஜ.க. ஒன்றிய தலைவர் மணிகண்டன் தலைமையில் டாஸ்மாக் கடைகள் திறப்பை கண்டித்து, அவரின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் பி.கோபி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பொதுச் செயலாளர் சரவணன், ஒன்றிய இளைஞரணி தலைவர் கார்த்தி, ஒன்றிய இளைஞரணி துணைத் தலைவர் தினேஷ், விவசாய அணி தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வந்தவாசியில் சன்னதி தெருவில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தேசிய குழு உறுப்பினர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.

சென்னாவரம் கிராமத்தில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் முத்துசாமி தனது வீட்டின் முன்பு குடும்ப உறுப்பினர்களுடன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

Tags:    

Similar News