செய்திகள்
கைது

கிருஷ்ணகிரி அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

Published On 2021-11-26 09:15 GMT   |   Update On 2021-11-26 09:15 GMT
கிருஷ்ணகிரி அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசார் துவாரகாபுரி முருகன் கோவில் பின்புறம் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சாவுடன் நின்ற சின்னமுத்தூர் தியாகராஜன் (வயது 30), துவாரகாபுரி சரவணன் (23), செந்தமிழ் (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4,500 மதிப்புள்ள 450 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News