செய்திகள்
ரொனால்டோ

ரொனால்டோவின் செய்கையால் ஒரே நாளில் கோக-கோலா நிறுவனத்தின் பங்குகள் ரூ. 29 ஆயிரம் கோடி சரிவு

Published On 2021-06-16 17:25 GMT   |   Update On 2021-06-16 17:25 GMT
பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரெனால்டோவின் ஒரே ஒரு செயலால், கோக-கோலா நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு ஒரே நாளில் 400 கோடி டாலர் சரிந்தது.
போர்ச்சுக்கல்- ஹங்கேரி இடையிலான போட்டிக்கு முன்னதாக ரொனால்டோ செய்தியாளர்களை சந்தித்தார். யூரோ கால்பந்து போட்டியில் கோக-கோலா நிறுவனம் ஸ்பான்சராக இருப்பதால் அதன் 2 பாட்டில்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன.

அப்போது மேஜை மீது இருந்த இரண்டு கோககோலா பாட்டில்களை எடுத்து ஓரமாக வைத்த ரெனால்டோ, அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்து, எல்லோரும் தண்ணீர் குடியுங்கள் என்பதுபோல் உயர்த்திக் காட்டினார்.

இந்த காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பரவி கோக-கோலா நிறுவனத்தின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்நிறுவன பங்குகள் விலை குறைந்து, அதன் சந்தை மதிப்பு ஒரே நாளில் சுமார் 29,316.40 கோடி ரூபாய் வரை சரிந்தது.
Tags:    

Similar News