செய்திகள்
தற்கொலை

கரூர் அருகே தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை

Published On 2021-10-13 08:57 GMT   |   Update On 2021-10-13 08:57 GMT
கரூர் அருகே தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் வெங்கமேடு செங்குந்தர் நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 33), டிரைவர். இவருடைய மனைவி பிரியா (27). இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் சத்தியமூர்த்தி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மனவேதனை அடைந்த சத்தியமூர்த்தி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வெங்கமேடு சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சத்தியமூர்த்தியின் உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News