ஆட்டோமொபைல்
டாடா நெக்சான் இவி

பத்து புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யும் டாடா மோட்டார்ஸ்

Published On 2021-06-29 07:09 GMT   |   Update On 2021-06-29 07:09 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பத்து புது எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இதற்காக இந்தியா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த இன் செல் மற்றும் பேட்டரி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் டாடா மோட்டார்ஸ் கூட்டணி அமைத்து இருக்கிறது. 



டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன விற்பனை இந்த ஆண்டு மட்டும் இரண்டு சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நெக்சான் இவி மாடல் விற்பனையில் இதுவரை 4 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. 

"எலெக்ட்ரிக் வாகன விற்பனை எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என நம்புகிறோம். 2025 வாக்கில் பத்து புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதுதவிர நாடு முழுக்க சார்ஜிங் சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் முதலீடு செய்ய இருக்கிறோம்," என டாடா மோட்டார்ஸ் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்தார்.  
Tags:    

Similar News