செய்திகள்
பேரையூர் அருகே பூட்டிய வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
பேரையூர் அருகே பூட்டிய வீட்டில் 10 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:
பேரையூர் அருகே உள்ள புதுரெங்கபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மனைவி லதா (வயது 39). சரவணகுமார் செக்கானூரணியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். லதா நேற்றுமுன்தினம் இரவு அருகில் உள்ள அவருடைய மாமியார் வீட்டில் சென்று தங்கியிருந்தார். நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டு பீரோவை உடைத்து அதிலுள்ள 10 பவுன் நகை திருடு போயிருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பேரையூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.