செய்திகள்
சட்டப்பேரவையை கூட்டுவது தொடர்பாக ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
ஆளுநர் உரையில் இடம் பெறக்கூடிய முக்கிய அம்சங்கள் குறித்து முதல்வர் முக ஸ்டாலின் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் சந்தித்தார்.
16வது சட்டப்பேரவையை கூட்டுவது தொடர்பாக ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
ஆளுநர் உரையில் இடம் பெறக்கூடிய முக்கிய அம்சங்கள் குறித்து பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆளுநரிடம் எடுத்துரைத்தார்.