ஆன்மிகம்
இழந்த செல்வத்தை பெறுவதற்காக சிறந்த பரிகாரங்கள்

இழந்த செல்வத்தை பெறுவதற்காக சிறந்த பரிகாரங்கள்

Published On 2021-02-27 07:13 GMT   |   Update On 2021-02-27 07:13 GMT
இழந்த செல்வத்தை மீட்க ஒரே வழி இறைவனை பூஜிப்பது மட்டுமே. இறைவனை மனமுருகி வணங்கினால் இறைவன் இரட்டிப்பாக நமக்கு தருவான்.
நாம் அள்ள அள்ள குறையாமல் செல்வத்தை சேகரித்து வைத்தாலும், ஒரு சில நேரத்தில் அனைத்தையும் இழந்து விடுகிறோம். நாம் இழந்ததை மீட்க முடியாது என எண்ணி அதைவிட்டு விடுகிறோம். ஆனால் இழந்த செல்வத்தை மீட்க ஒரே வழி இறைவனை பூஜிப்பது மட்டுமே. இறைவனை மனமுருகி வணங்கினால் இறைவன் இரட்டிப்பாக நமக்கு தருவான்.

வாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை மண் அகலில் கருநீல துணியில் சிறிது வெண்கடுகை இட்டு முடிந்து அதில் நல்லெண்ணெய் விட்டு தீபமிட்டு மனமார வேண்டினால் இழந்த புகழ், செல்வம் அனைத்தும் கிடைக்கும்.

தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபாடு செய்தால் இழந்த செல்வத்தை பெற முடியும். நமக்கு செல்வ வளங்களை வழங்குவதற்கும் நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழ வைப்பதற்கும் பைரவர் வழிபாடு மிக முக்கியமானது.

திருப்பதி ஏழுமலையான் திருமணத்துக்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்று புராணங்கள் கூறுகின்றன. குபேரனுக்கு ஏற்பட்ட சாபத்தினால் நாடு, நகரம், பொன், பொருள் அனைத்தையும் இழந்து நின்ற போது, லட்சுமி தேவியை வணங்கினார்.

தேவி லட்சுமியை வணங்கியதால் இழந்ததை பெற்றார். ஆகவே லட்சுமியை வணங்கினால் இழந்த செல்வத்தை பெறலாம். வரலட்சுமி விரத பூஜையை வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கு ஏற்ப செய்யலாம்.

Tags:    

Similar News