உள்ளூர் செய்திகள்
ஆரணி அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தில் உள்ள கண்ணாடி மாளிகை.

கண்ணாடி மாளிகையை சீரமைக்க ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு

Published On 2022-04-15 11:11 GMT   |   Update On 2022-04-15 11:11 GMT
ஆரணி அருகே கண்ணாடி மாளிகையை சீரமைக்க ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பூசிமலைக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள 1806-ம் ஆண்டு திருமலை ராவ் தன்னுடைய காதல் மனைவிக்காக கட்டபட்ட இந்த கண்ணாடி மாளிகை தற்போது 215 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளன.

மேலும் கடந்த 70ஆண்டுக்கு மேலாக வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் கட்டுபாட்டில் இருந்ததை தற்போது வனத்துறை கட்டுபாட்டில் இருப்பதால் கண்ணாடி மாளிகைக்கு சுற்றி வேலி அமைத்து வனத்துறைக்கு சொந்தமான இடமாக அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் சட்ட சபையில் நேற்று முன்தினம் பொதுப்பணி துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் எ.வ.வேலு சுமார் ரூ.11 கோடியே 30 லட்சம் மதிபீட்டில் புனரமைத்து பாதுகாக்கப்படும் என்று அறிவித்தார்.

இதனையடுத்து முதல்- அமைச்சரும், எ.வ.வேலு அமைச்சருக்கும் மிக்க நன்றி எனவும் படவேடு உள்ளிட்ட பகுதிகளில் கண்டெடுக்கப் படும் நினைவு சின்னங்கள் இந்த கண்ணாடி மாளிகையில் வைத்து பாதுகாத்து வரலாற்று சுற்றுளா தலமாக மாற்ற கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News