ஆன்மிகம்
ராப்பத்து திருவிழா நிறைவு: சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாள்
திருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் வழித்துணை பெருமாள், கூடலழகர் பெருமாள் கோவிலில் வியூக சுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் பகல் பத்து திருவிழா கடந்த மாதம் 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி முடிய நடந்தது. இதையொட்டி தினமும் சிறப்பு அலங்காரத்தில் கள்ளழகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதைதொடர்ந்து 25-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
அன்று முதல் நேற்று வரை ராப்பத்து திருவிழாவுடன் 10 நாள் விழாநிறைவு பெற்றது. இதில் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரத் துடன், பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க சுவாமிக்கு பூஜைகள் நடந்தது. இத்துடன் இந்த திருவிழா நிறைவு பெற்றது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.
இதேபோல் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் ராப்பத்து கடைசி நாளான நேற்று திருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் வழித்துணை பெருமாள், கூடலழகர் பெருமாள் கோவிலில் வியூக சுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.